ஸ்பிக் நிறுவனம் சார்பில் கல்வி மையம் திறப்பு விழா

ஸ்பிக் நிறுவனம் சார்பில் கல்வி மையம் திறப்பு விழா
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் சுனாமி காலனியில் கல்வி மையம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி சுனாமி காலனியில் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று ஸ்பிக் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் பங்களிப்பு மூலம் கல்வி மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் பாலு, முதுநிலை மேலாளர் நிர்வாகம் ஜெயப்பிரகாஷ், முதுநிலை மேலாளர் சிவில் சதீஷ் கண்ணன், மேலாளர் பரமசிவம், பொது ஏஎம்எப் மேலாளர் சிப்ரியான் பால்ராஜ், மேலாளர் யுவன், மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story