ஊராட்சி மன்ற தலைவர் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஊராட்சி மன்ற தலைவர் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியில் அதிமுகவைச்சேர்ந்த குப்பன் தெய்வத்திரு பெருமாயி மற்றும் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த வளர்மதி வேலு இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை பங்கேற்று மணமக்கள் சண்முகம் - பவித்ரா ஆகியோரிடம் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது வருகை புரிந்த புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேரள செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது எடப்பாடி ஒன்றிய செயலாளர்கள் நெடுங்குளம் மாதேஸ்வரன், பக்கநாடு மாதேஷ், எடப்பாடி நகர செயலாளர் முருகன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story