ஆசனூர் அருகே யானைகளுடன் செல்பி எடுக்கும் இளைஞர்கள்

ஆசனூர் அருகே யானைகளுடன் செல்பி எடுக்கும் இளைஞர்கள்
ஆசனூர் அருகே யானைகளுடன் செல்பி எடுக்கும் இளைஞர்கள்
ஆசனூர் அருகே யானைகளுடன் செல்பி எடுக்கும் இளைஞர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையோரம் பகல் மற்றும் இரவில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை அதன் குட்டிகளுடன் நடமாடி கொண்டு இருந்தது. வனப்பகுதி வழியாக வந்த பைக்கில் வந்த சிலர் யானைகளை பார்த்ததும் சாலையில் நின்ற படி செல்பி எடுத்தனர். இதை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் மொபைலில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் யானை அருகில் உள்ளது கவனம் என்ற வாசகத்துடன் பதிவு விட்டது வைரலாகி வருகிறது.
Next Story