வீரமாத்தி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.

வீரமாத்தி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது.
வீரமாத்தி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் மகாமுனிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி, மாலை 6 மணி அளவில், வளையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, எலவனூர் அருகே உள்ள எல்லமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், வலையனூர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம், தொக்குப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், வலையனூர் காலனி பகுதியைச் சேர்ந்த ராமன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250தையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.
Next Story