பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை விடுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ், 270.77 கோடி ரூபாய் மானியத்தொகை விநியோகிக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் 9583 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு 1,05,413 புதிய நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது- காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே வி ஐ சி) தலைவர் ஸ்ரீ மனோஜ் குமார் பேச்சு விருதுநகரில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் (எம்எஸ்எம்இ) பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்தொகை விடுவிக்கும் நிகழ்ச்சியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கே வி ஐ சி) தலைவர் ஸ்ரீ மனோஜ் குமார் மகாத்மா காந்தி திருஉருவ படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் மூத்த நூற்போருக்கு கதராடை அணிவித்து கெளரவித்த அவர்,PMEGP இன் கீழ் ரூ.270.77 கோடி மானியம் தொகையை விடுவித்தார்.இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 கோடி மானியம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இளைஞர்களை கவரும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அங்கவஸ்திரத்தை அறிமுகப்படுத்திய பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரின் பிராண்ட் பவர் காரணமாக, முதன்முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்களின் வர்த்தகம், 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் KVIC ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது என்றும் பிரதமரின் பிராண்ட் சக்தியால், காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் விற்றுமுதல் 2023-24 நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது எனவும் இந்த காலகட்டத்தில், 10.17 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.இன்று பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ், 270.77 கோடி ரூபாய் மானியத்தொகை விநியோகிக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் 9583 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு 1,05,413 புதிய நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 10 ஆண்டுகளில், PMEGP இன் கீழ் நாடு முழுவதும் 9 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் இந்த காலகட்டத்தில், KVIC ஆனது ரூ. 67000 கோடிக்கு எதிராக ரூ.24000 கோடிக்கு மேல் மானியத்தை விநியோகித்துள்ளது மற்றும் PMEGP மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 83 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். தமிழகத்தில் 74 காதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2023-24 நிதியாண்டில், காதி உற்பத்தி 224.12 கோடி ரூபாயாகவும், இந்த காலகட்டத்தில் 397.63 கோடி ரூபாய் மதிப்பிலான காதி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காதி நடவடிக்கைகள் மூலம் 11872 கைவினைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
Next Story