கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது அதனை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த் வேண்டுமென உத்தரவிட்டது இந்த தேசிய கல்விக் கொள்கையின் படி ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் அல்லது மூன்றாவது மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது மேலும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்கியும் ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி உதவி முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது இந்த புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதால் சுமார் 573 கோடி நிதி மத்திய அரசு வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழகத்துக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் அணியினர் துணைச் செயலாளர் சிவபாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மண்டல தலைவரும் வழக்கறிஞர் சென்னியப்பன் தொடக்க உரையாற்றி வைத்தார் இதனைத் தொடர்ந்து திமுகவின் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே கே செல்வ மற்றும் திராவிட கழகம் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story