மரக்காணம் கடற்கரைப் பகுதிகளில் சாகர் கவாச் ஆப்ரேஷன்.

மரக்காணம் கடற்கரைப் பகுதிகளில் சாகர் கவாச் ஆப்ரேஷன்.
போலீசார் தீவிர சோதனை
கடற்கரை வழியை பயன்படுத்தி தீவிரவாதிகள் பல இடங்களில் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் கடல் வழியை பயன்படுத்தி தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் கடற்கரைப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தத்ரூபமாக சாகர் கவாஜ் ஆப்ரேஷன் ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் கோட்டகுப்பம் துணை காவல்கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் நடைபெற்றது.இதனால் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் காவல்துறையினர் முகாம் அமைத்து இ.சி.ஆர் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் மடக்கி தீவிரமாக பரிசோதனை செய்த பிறகே அந்த வாகனங்களை மீண்டும் செல்ல அனுமதித்தனர். மேலும் கடற்கரை பகுதிகளிலும் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story