கரூர் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடந்து நடந்து செல்ல முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடந்து நடந்து செல்ல முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
கரூர் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடந்து நடந்து செல்ல முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி அருகே உள்ள புனவாசிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பட்டன் வயது 60. இவர் செப்டம்பர் 5ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சீனு டீ கடை அருகே திடீரென சாலையை கடக்க முயன்று உள்ளார். இதே நேரத்தில் கரூர், அத்திப்பாளையம் அருகே உள்ள பழையபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சாலையை கடக்க முயன்ற பட்டன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டனுக்கு இடது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவ தொடர்பாக பட்டன் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story