பணகுடி அருகே தந்தையை வெட்டிய மகன் கைது

பணகுடி அருகே தந்தையை வெட்டிய மகன் கைது
கைது
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் சுப்ரமணியன்(60). இவரது மகன் வசந்தகுமார்(28). தந்தை - மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்றும் மீண்டும் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமார் கோடாரியை எடுத்து வெட்டியதில் சுப்ரமணியன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வசந்தகுமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Next Story