காக்காவாடியில் உடல் நசுங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை வழக்கு பதிவு.

காக்காவாடியில் உடல் நசுங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை வழக்கு பதிவு.
காக்காவாடியில் உடல் நசுங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காக்காவடி பகுதியில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் துரை அரசன் வயது 55. செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் காக்காவாடி பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் துரை அரசன். அங்கு அடையாளம் காண முடியாத நிலையில் நசுங்கிய நிலையில் இருந்த ஆண் உடலை பார்த்த பிறகு, இது தொடர்பாக வெள்ளியனை காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அடையாளம் தெரியாத நிலையில் உடல் நசுங்கி இருந்த ஆண் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் அடையாளம் காண்பதற்காக இருப்பு வைத்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விபத்தில் சீக்கியவரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story