அய்யம்பாளையத்தில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம்.

அய்யம்பாளையத்தில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம்.
அய்யம்பாளையத்தில் டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் பாரதி கண்ணன் வயது 25 . இவரது தந்தை பால்ராஜ் வயது 45, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 30 இவர்கள் மூவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7:15 மணியளவில் சேலம் - கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரில் பாரதி கண்ணன் ஓட்டி சென்றார். இவர்களது வாகனம் அய்யம்பாளையம் தனியார் டைல்ஸ் கடை அருகே வந்தபோது, கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா, நன்னியூர் அருகே உள்ள செவ்வந்திபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 30 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பாரதி கண்ணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அனைவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். டூவீலரில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்ததால், அவர்களை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாரதி கண்ணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story