மீனவர்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா

மீனவர்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா
பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் மீனவர்களுக்கு கடன் உதவி அட்டை வழங்கும் விழா நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு சமுதாய கூடத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு  விவசாய கடன் அட்டை ( KCC ) வழங்கும் முகாமில் 11 பயனாளிகளுக்கு ரூ.3.85 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர்  மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன்,நகராட்சி ஆணையாளர் தாமரை, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் முருகன் , த.உமா கலைச்செல்வி உதவி இயக்குனர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி, மீன்வள ஆய்வாளர், கு.பிரபாவதி, மீன்வள சார் ஆய்வாளர்,கோகிலவாணி,  மீன்வள மேற்பார்வையாளர்கள் , நகர மன்ற உறுப்பினர்கள்,  நகர திமுக நிர்வாகிகள் மகுடேஷ், திருநாவுக்கரசு, நந்தபிரகாஷ், கார்த்திக் ராஜ், ரவிச்சந்திரன், பச்சையப்பன், சண்முகம், செந்தில்,  கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
Next Story