பெரிய கொடிவேரியில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

X
பெரிய கொடிவேரியில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை டி என் பாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரி சவேரியார் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவருடைய மகன் பிரவீன் குமார் வயது 19 இவர் டி என் பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர் அதன் பின்னர் சிறிது நேரத்தில் வேலைக்கு சென்று இருந்த தந்தை சுரேஷ் வீட்டுக்கு வந்தார் அப்போது வீட்டின் உள்ள விட்டத்தில் தூக்கு போட்டு பிரவீன் குமார் தொங்கிக் கொண்டிருந்தார் அதைப் பார்த்து அலறி துடித்த சுரேஷ்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டார் ஆனால் பிரவீன் குமார் உயிர்யிழந்துவிட்டது தெரிந்தது இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பெயரில் விரைந்து வந்த போலீசார் பிரவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

