கள்ளக்காதலனுடன் சென்று பெண் திடீர் தற்கொலை
Nagercoil King 24x7 |27 Sep 2024 12:43 AM GMT
மார்த்தாண்டம் அருகே
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கழுவந்திட்டை காலனியை சேர்ந்தவர் சுனில் குமார் (41). மனைவி பிரின்சி (33). சுனில் குமார் சவுதி அரேபியாவில் வேலை பார்கிறார். இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அபினேஷ் (25) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சுனில் குமார் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்து மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலான அபினேஷ் உடன் பிரின்சி மாயமானார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் சுனில் குமார் புகார் செய்தார். போலீஸ் தேடுவதையடுத்து காதலனுடன் போலீஸ் நிலையம் வந்த பிரின்சி கள்ளக்காதலனுடன் செல்வேன் என்று அடம்பிடித்தார். போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் ஏற்காமல் கணவர், இரண்டு பிள்ளைகளையும் உதறி தள்ளி விட்டு காவல் நிலையத்திலிருந்து கள்ளக்காதலுடன் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி கழுவன்திட்டை பஸ் நிறுத்தம் அருகே திடீரென பிரின்சி விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (25-ம் தேதி) மாலை பிரின்சி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story