கரூரில் பொன்கலை நாட்டு ரெட்டி நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கரூரில் பொன்கலை நாட்டு ரெட்டி நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கரூரில் பொன்கலை நாட்டு ரெட்டி நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பொன்கலை நாட்டு ரெட்டி நல சங்க மகாசபை கூட்டம், ரெட்டி நல சங்க சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ- மாணவியருக்கு கல்வி பரிசு வழங்கும் விழா, கரூர் மாவட்ட ஓபிஆர் சாரிடபிள் டிரஸ்ட் துவக்க விழா என முப்பெரும் விழா சங்கத்தின் தலைவர் சஞ்சீவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பாலன், பொருளாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் சுப்புராமன், ரங்கராஜ், துணைச் செயலாளர்கள் ரேணுகோபால், பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு 2023- 24 ஆம் ஆண்டிற்கான கல்வி பரிசு, பாராட்டு சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஓபிஆர் சாரிடபிள் டிரஸ்ட் துவக்க விழாவும் நடைபெற்றது.
Next Story