அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி ஏற்பு. திமுகவினர் கரூரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி ஏற்பு. திமுகவினர் கரூரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி ஏற்பு. திமுகவினர் கரூரில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை தொடர்ந்து சிறையிலிருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மீண்டும் சென்னையில் தமிழக அமைச்சராக சற்று முன் பதவி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கரூரில், திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் ஒன்று கூடினர். ரவுண்டானாவில் உள்ள அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜியை வாழ்த்தி, கோஷங்கள் எழுப்பி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள், கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியேற்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இதனால் கரூர் பேருந்து நிலைய ரவுண்டான பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
Next Story