துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு ராசிபுரத்தில் இளைஞர் அணி சார்பில் சுவர் விளம்பரங்கள்

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு ராசிபுரத்தில் இளைஞர் அணி சார்பில் சுவர் விளம்பரங்கள்
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு ராசிபுரத்தில் இளைஞர் அணி சார்பில் சுவர் விளம்பரங்கள்
தமிழ்நாடு அரசு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதேபோல் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோ.வி.செழியன், ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோரும், இலாக்கா மாற்றும் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் பொன்முடி, மருத்துவர் மா.மதிவேந்தன், கயல்விழி உள்ளிட்டோர் பதவியேற்றனர். துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினை வாழ்த்து தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனையின் பேரில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம் கார்த்திக் ஏற்பாட்டில் ராசிபுரம் நகரத்தில் பல்வேறு இடங்களில் வாழ்த்து சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
Next Story