குளத்து பாளையத்தில் மது அருந்திய கணவன். திட்டிய மனைவி. விஷம் குடித்து உயிரிழப்பு.
Karur King 24x7 |29 Sep 2024 12:13 PM GMT
குளத்து பாளையத்தில் மது அருந்திய கணவன். திட்டிய மனைவி. விஷம் குடித்து உயிரிழப்பு.
குளத்து பாளையத்தில் மது அருந்திய கணவன். திட்டிய மனைவி. விஷம் குடித்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்டமங்கலம் அருகே உள்ள குளத்துப்பாளையம், புங்கோடை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 44. இவரது மனைவி பழனியம்மாள் வயது 40. ராமலிங்கத்துக்கு அண்மைக்காலமாகவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கம். இதேபோல, செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவில் மீண்டும் ராமலிங்கம் மது அருந்தி வீட்டுக்கு திரும்பியதை பார்த்த மனைவி பழனியம்மாள், கணவனை திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த ராமலிங்கம், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த பழனியம்மாள் தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மருத்துவர்கள் ராமலிங்கத்தை பரிசோதித்து பார்த்துவிட்டு,அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராமலிங்கத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story