ராசிபுரம் அருகே நாய் கடித்து மூன்று பேர் சிகிச்சை : நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..

ராசிபுரம் அருகே நாய் கடித்து மூன்று பேர் சிகிச்சை : நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..
ராசிபுரம் அருகே நாய் கடித்து மூன்று பேர் சிகிச்சை : நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையம், மற்றும் தொப்பம்பட்டி ஜேடர்பாளையம் போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் தொப்பம்பட்டி காட்டுக்கொட்டாய் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகினி காட்டு வேலைக்குச் சென்ற போது வெறி நாய் கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஸ்ரீதரன் என்பவரையும் நாய் கடித்து ஜேடர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றனர். மேலும் பழனியம்மாள், என மூன்று பேரை நாய் கடித்ததாக அப்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர், மேலும் கடந்த சில மாதங்கள் முன்பு இதே போல நாய் கடி சம்பவம் இப்பகுதியில் நடந்துள்ளதாகவும் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர். எனவே இதற்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story