வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், பாலம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் சந்தோஷ் பாபு வயது 39. சந்தோஷ் பாபுக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வலிப்பு நோய் ஏற்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து வலிப்பு நோயை போக்குவதற்காக தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தார். ஆயினும் அவருக்கு வலிப்பு நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த சந்தோஷ் பாபு, செப்டம்பர் 27ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் அவரது வீட்டில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கரூர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷ் பாபுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சந்தோஷ் பாபுவின் தாயார் கலைச்செல்வி வயது 62 என்பவர் காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story