தடை செய்யப்பட்ட புகையிலை விற்றால் குண்டாஸ் - கலெக்டர் எச்சரிக்கை
Nagercoil King 24x7 |29 Sep 2024 12:35 PM GMT
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சா, குட்கா போன்றவை விற்பனை செய்யும் கடைகள் சீல் வைக்கப்ப டுகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படுகிறது. இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என் பது தொடர்பாக நேற்று (28. ம் தேதி) சோதனை மேற்கொண்டார். கடைகளில் பார்வையிட்ட அவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கடையில் இருந்தவர்களி டம் அறிவுரை வழங்கினார். குறிப்பாக சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா, கூல் லிப் விற்பது தண்டனைக்குரிய குற்றம் மற்றும் புகார் அளிக்க வேண்டி தொலைபேசி எண்கள் தொடர்பான விபரங்களுடன் அட்டை ஒன்றையும் கடைகளில் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் புகையிலை பொருட்கள் விற்றதாக 3 முறைக்கு மேல் நிருபிக்கப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பகவதி பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story