அதிமுக சார்பில் சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!

மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 400க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் திருப்பூர் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் பங்கேற்றார். மேலும் திமுக அரசுக்கு எதிராக அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story