கோபாலபுரம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோபாலபுரம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோபாலபுரம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோபாலபுரம் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரம் யாதவர் காலனி செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.


சுமார் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவில் செல்வதற்கு ஆட்டோ கார் போன்ற வாகனமும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் ஊராட்சி மன்ற தலைவர் இடமும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்வதற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் சோளிங்கர் மற்றும் எரும்பி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story