பாரம்பரிய கலைகள் முழங்க தமிழ்நாடு பிறந்தநாள் விழா!

X
மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வளாகத்தில் தமிழன்டா இயக்கத்தினர் கடலை மிட்டாய் வழங்கி கொண்டாடினர். விழாவிற்கு தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் தலைமையில் சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினார். விழாவில் தமிழன்டா இயக்க கௌரவ ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்தந்த மாநில பண்பாடுகள் அந்தந்த மாநிலத்தில் போற்றப்பட வேண்டும் செண்டை மேளம் கேரளாவில் மட்டுமே போற்றப்பட வேண்டும் என தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் தெரிவித்தார்.
Next Story

