மல்லூர் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வருக்கு விருது..

X
Rasipuram King 24x7 |11 Nov 2024 12:54 PM ISTமல்லூர் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வருக்கு விருது..
21ஆம் நூற்றாண்டில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அளிக்கும் வகையில் உபயோகிப்பது குறித்து சென்னையில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி முதல்வர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்கள்/ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில்நுட்ப கட்டமைப்புச் சேவைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். மல்லூர் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் கணேஷ் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். தேசிய அளவில் கல்விச் சேவையில் சிறந்த பள்ளி முதல்வர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்களுக்கும் சுவாமி விவேகானந்தர் தேசிய முதல்வர் விருது வழங்கப்பட்டது. மல்லூர் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் கணேஷ் அவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் தேசிய முதல்வர் விருது வழங்கி கௌரவித்தது. பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு,நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story
