பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

X
Komarapalayam King 24x7 |1 Dec 2024 1:36 PM ISTகுமாரபாளையத்தில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சாலையோர கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை 03:30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் சென்றது.
Next Story
