திருமணிமுத்தாரில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |3 Dec 2024 1:31 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, திருமணிமுத்தாறில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பில்லூர், இராமதேவம் ஊராட்சிகளில் இன்று திருமணிமுத்தாறில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பரமத்தி வேலூர் வட்டம், பில்லூர் மற்றும் இராமதேவம் ஊராட்சிகளில் திருமணிமுத்தாறில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திருமணிமுத்தாறின் நீர் பிடிப்பு பகுதிகளான சேலம் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்பொழுது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நீர் பிடிப்பு பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீர் வரத்து உள்ளிட்ட விவரங்களை நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வருவாய் துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.முன்னதாக, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அண்ணா நகரில் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கிடுமாறும், வெள்ள நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வுகளில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், வட்டாட்சியர்கள் சீனிவாசன், ப.முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், கிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




