சங்கரன்கோவில் திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை முன்பு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார். சித்த மருத்துவர் செல்வராணி தலைமையில் இன்று காலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் வேலுச்சாமி, சக்திவேல், மோகன், சரவணன், சதாசிவன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

