ஆலங்குடியில் நகை கடையில் கண்ணாடி உடைத்த சம்பவத்தில் ஒருவர் கைது!
ஆலங்குடி கலைஞர் சாலையில் நகைக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி 3 வாலிபர்கள் பணம் கேட்டு நிறுத்தியுள்ளனர். கடையின் உரிமையாளர் பணம் தராததால் ஆத்திரத்தில் நகைக்கடை கண்ணாடியை உடைத்துள்ளனர். அதில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான பாபு என்பவரை கைது செய்து ஆலங்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story





