அரசு பஸ் மோதி பால் வியாபாரி பலி

X
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் கொல்லங்கள் கோவில் கிராமம் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60) பால் வியாபாரி. இவர் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சங்கரண்டாம் பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். முத்தூர் சாலையில் வேலாயுதம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது பின்னால் முத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story

