கரூரில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

கரூரில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
கரூரில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள ஏழை,எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12-ம் வகுப்பு முடித்தவுடன் உயர் கல்வி தொடர முடியாமல் போகிறது. எனவே இந்த மாணவிகளின் கல்வி தடைப்படாமல் அவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000- வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் 2024-25-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, தமிழ் வழி கல்வியில் பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்ற இவ்விழாவின் விரிவாக்க நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் தற்போது 37 கல்லூரிகளில் பயின்று வரும் 1258- மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் கல்லூரியின் முதல்வர், சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிறகு மாணவிகளுக்கு பற்று அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story