டூவீலர் ஓர்க்ஷாப் உரிமையாளரை தாக்கும் எஸ்.ஐ.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்ஃபீல்டு இரு சக்கர வாகன பழுது நீக்கும் ஒர்க் ஷாப்பை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் நடத்தி வருகிறார். மதுரை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி தற்போது பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை சில மாதங்களுக்கு முன்பு, தனது காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலர் மூலம் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து ஒர்க்ஷாப்பில் பணி செய்ய கூறியுள்ளார். அவரும் அந்த வாகனத்தை ஒர்க்ஷாப்பில் பழுது நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சீனிவாசன் பழைய பாக்கி இருப்பதாகவும், பழைய பாக்கி தந்தால் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் கூறி வேலை பார்க்காமல் இருந்துள்ளார். பின்பு அண்ணாதுரை தொடர்ந்து சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை வேலை பார்க்குமாறு தொடர்ந்து அழைத்துள்ளார்.சீனிவாசன், அண்ணாதுரை அழைப்பை எடுக்காததால் கோவம் அடைந்த உதவி ஆய்வாளர் அண்ணாதுரை கடந்த 4ம்தேதி மதியம் 2:30 மணிக்கு பதிவு எண் தெரியாத வாகனத்தில் சீனிவாசனின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று சீனிவாசனை வாகனத்தில் ஏறுமாறு மிரட்டி, அவரைத் தாக்கி என் வாகனத்தையா வேலை பார்க்க மாட்டாய். உன் மீது கஞ்சா வழக்கு போட்டுடுவேன் என மிரட்டி வாகனத்தில் ஏற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து சீனிவாசன் மதுரை எஸ்.பி., முதல்வர் தனிப்பிரிவு, மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணா துரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
Next Story



