புதுக்கடை: பென்ணுக்கு கொலை மிரட்டல்
Nagercoil King 24x7 |10 Jan 2025 10:35 AM GMT
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி மேலக்களப்பாறை பகுதியை ேசேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் மனைவி மரிய பேபி (57). சம்பவ தினம் சென்னித் தோட்டம் பகுதி சங்கர், காப்புக் காடு பகுதி சேவியர் இக்னேஷியஸ் ஆகிய இருவரும் மரிய பேபியின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். பின்னர் மரிய பேபியின் கன்னத்தில் அறைந்து, பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மரியபேபி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story