பயணிகளுக்கு உதவியவரை கௌரவித்த எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோவனேரி பாலம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து அவ்வழியாக சென்ற ஜாலிஸ் பில்டன் என்பவர் பேருந்தில் அவசர கால கதவினை உடைத்து பயணிகளுக்கு உதவியுள்ளார். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகரம் சார்பாக நேற்று ஜாலிஸ் பில்டனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
Next Story




