காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் கூட்டம்

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் கூட்டம்
X
சுற்றுலா
காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் கொண்டாட்டங்களில் மூன்றாவது நாள் காணும் பொங்கல், கன்னிப் பொங்கல், உழவர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உறவினர்கள், நண்பர்களைக் காணுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மேற்கொள்வது வழக்கம். இதன்படி, தஞ்சாவூர் பெரியகோயில், அரண்மனை, தஞ்சாவூர் அருங்காட்சியகம், கல்லணை, மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கமான நாள்களை விட வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விளையாடியும், அதே இடத்தில் உணவு அருந்தியும் கொண்டாடி மகிழ்ந்தனர். வெளியூர்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால், பெரியகோயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலிலும் காணும் பொங்கலையொட்டி வியாழக்கிழமை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தங்களது உறவினர்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் கோயில் மைதான வளாகத்தில் குவிந்தனர்.
Next Story