ஆலங்குளம் அருகே புதுப்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அய்யனார் கிராமத்தை சேர்ந்த சேர்மக்கனி என்பவருக்கு ஜோதி சந்திரகனி(23) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை காரணமாக ஜோதி சந்திரகனி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வந்த நிலையில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

