பழங்குடியின மக்களுடன் கலெக்டர்  கலந்துரையாடல் 

பழங்குடியின மக்களுடன் கலெக்டர்  கலந்துரையாடல் 
X
பேச்சிப்பாறை
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை  ஊராட்சிக்குட்பட்ட எட்டாங்குன்று மலைபகுதியில் காணி இன பழங்குடியின மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அழகுமீனா, நேரில் சந்தித்து, கலந்துரையாடி தெரிவிக்கையில்-       பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினர்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக அந்தப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில்; தோட்டமலை, மாறாமலை, எட்டாம் குன்று, வளையம் தூக்கி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களுடன் எட்டாங்குன்று குடியிருப்பில் வைத்து கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ்  நில உரிமை வழங்கப்படும் என்றும் அதற்கு அரசு தயாராக இருக்கிறது.  வரும் நிதியாண்டில் இப்பகுதி மக்களுக்கு அதிகமான அளவில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்        நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா   உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story