யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி
X
கடம்பூர் மலை கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பலி
கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி, தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் ராஜப்பன் மக்காச்சோள காட்டிற்கு இரவு காவலுக்கு சென்றுள்ளார். அப்போது மக்காச்சோள காட்டிற்குள் மறைந்து நின்றிருந்த காட்டு யானை ராஜப்பனை கண்டு தாக்கியுள்ளது.யானை தாக்குவதை கண்டு அருகில் இருந்த காட்டில் காவல் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், ஜடைசாமி, மாரன் ஆகியோர் சத்தம் போட்டு யானையை விரட்டியதில் காட்டுக்குள் சென்று மறைந்தது. சம்பவ இடத்தில் ராஜப்பன் யானை தாக்கியதில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார், அங்கிருந்தவர்கள் ராஜப்பாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பசுவனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ராஜப்பனை கொண்டு சென்றனர்.அங்கு ராஜப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர், அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இறந்து போன ராஜப்பனுக்கு அலமணி என்கிற மனைவி உள்ளார்.
Next Story