பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!
மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார் பட்டினம் கிராமத்தில் மும்தாஜ் பேகம் என்பவர் தனிமையில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்ற நிலையில், இதை நோட்டமிட்டமர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 38 ஆயிரம் ரொக்க பணத்தையும் 2 பவுன் நகையையும் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து மணிமேல்குடி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






