மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு மாவட்ட தலைவர் கனி தலைமையில் நடைபெற்றது. இதில் நயினார் குளத்தில் அமலை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

