ஆச்சி மங்கலத்தில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.

ஆச்சி மங்கலத்தில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
ஆச்சி மங்கலத்தில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர்-ஆச்சிமங்கலம் பொன்குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியரசு மனைவி விஜயா வயது 59. ஜனவரி 28ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஈசநத்தம் - கரூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஆச்சிமங்கலம் அம்மன் அக்ரோ டெக் நிறுவனம் எதிரே நடந்து சென்ற போது, எதிர் திசையில் ஆச்சிமங்கலம் அருகே உள்ள சின்ன கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி வயது 40 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற விஜயா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயாவுக்கு தலை, வலது கால் உள்ளிட்ட பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சின்னதம்பி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோனி மலை காவல்துறையினர்.
Next Story