தோன்கனிக்கோட்டை: விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.

X

தோன்கனிக்கோட்டை: விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் அடுத்த ஒன்னுப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (52) தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் அன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது இவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த வெங்கடேசப்பா மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வெங்கடேசப்பா உயிரிழந்தார். இது கு றித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தினர்.
Next Story