வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு மகா தீபாராதனைகள்.

வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு மகா தீபாராதனைகள்.
X
மதுரை அருகே சோலைமலை முருகன் கோவிலில் தை பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில் இயற்கை எழிலுடன் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா தனி பெருமையுடையது. இந்த விழாவானது நேற்று முன்தினம் (பிப். 2) மங்கள இசையுடன் மூலவர் சன்னதி முன்புள்ள தங்கக் கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்தில் மயில், வேல், சேவல், உள்ளிட்ட ஆன்மிக அடையாள கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் 2-வது நாளான நேற்று (பிப்.3)சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் வித்தக விநாயகர், மூலவர் சுவாமி, மற்றும் வேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் , யாகசாலையில் யாகம் வளர்க்கப்பட்டு தீபாராதனைகளும் பின்னர் சோலை மலை முருகன் ,வள்ளி தெய்வானை ஆகியோருக்கு மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. நேற்று (பிப்.3) மாலையில் மேள தாளம் முழங்க சோலைமலை முருக பெருமான் தனது துனைவியார்கள் வள்ளி தெய்வானையுடன் சாமி புறப்பாடு நடைபெற்றது.
Next Story