குறுக்கே டூவீலர் நுழைந்ததால் அடுத்தடுத்து மோதிய கார்கள்

X

வடமதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே டூவீலர் நுழைந்ததால் அடுத்தடுத்து மோதிய கார்கள் - டூவீலரில் வந்த தாத்தா மற்றும் பேரன் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவர் தனது பேரன் சந்துரு(வயது 12) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அய்யலூரில் உள்ள தனியார் எலும்பு முறிவு வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு சந்துருவிற்கு மாவு கட்டு போட்டுவிட்டு, இருவரும் மீண்டும் ஊருக்கு திரும்பினர். அய்யலூரில் உள்ள பேசும் பாலமுருகன் கோவில் அருகே திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே கடந்த போது, அந்த வழியே வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. அப்போது பின்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு காரும் அந்த காரின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கருப்பையா மற்றும் சந்துரு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story