ரயில்வே திட்டங்கள்  நிறைவேற்றுவதில் தாமதம்: எம்.பி கோரிக்கை

ரயில்வே திட்டங்கள்  நிறைவேற்றுவதில் தாமதம்: எம்.பி கோரிக்கை
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-          தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை மத்திய அரசு தாமதபடுத்தி வருகிறது.   திருவனந்தபுரம் - நெல்லை இடையே மெமு (MEMU) ரயில்களை கூடுதலாக இயக்கி தினமும் இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.       சென்னை - கன்னியாகுமரி இடையேயான ரயில்பாதையில் உள்ள வேக கட்டுப்பாடு காரணமாக ரயில்களை வேகமாக இயக்க இயலாமல் ரயில்வே நிர்வாகம் உள்ளது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் “கவச்” கருவிகள்  அங்கீகரிக்கபட்ட 1460 கிலோ மீட்டர் தூரத்தில் வெறும் 600 கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது.         535 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகை, இந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதை மீண்டும் தொடங்கி முதியோர்களின் அல்லலை போக்க வேண்டும்.       இத்தகைய மிக முக்கியமான மக்கள் தேவைகள் குறித்து விவாதிக்க சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.
Next Story