இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி.

X
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காலை முதல் ஆங்காங்கே பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை நிராகரித்ததை எதிர்த்து மதுரை மாவட்ட இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது . இதனை இன்று (பிப்.4) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று (பிப்.4) மாலை 5.00 முதல் 6.00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.
Next Story

