அன்புமணி தலைமை ஏற்ற பிறகு பாமகவில் இளைஞர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்*

X

பாமக தான் அதிமுகவுடனும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு காசு சம்பாதிக்கிறார்கள் இட ஒதுக்கீடு என்பது ஒரு பொய்யான பரப்புரை என ஜெ குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படையின் மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் குற்றம் சாட்டி பேசினார். .
அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ. குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காடுவெட்டியில் ஜெ குருவின் பிறந்தநாளையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலையை அவரது தாய் கல்யாணி, சிதம்பரம் திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான ஆர் செந்தில்வேலன், கடலூர் மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கலைக்கோவன், ஆகியோர் திறந்து வைத்தனர். மாநில போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெ.குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உடன் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10.5 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவீரன் மஞ்சள் படையின் மாநில அமைப்பு தலைவர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவும் அவரது மகன் கனலரசனும் சமுதாயத்திற்காக தான் உழைக்கிறார்கள் ஜெ.குரு இறக்கும்போது கடனாளியாக தான் இறந்தார். மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் இறந்து போனார். இவர்கள்தான் (பாமக) அதிமுகவுடனும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு காசு சம்பாதிக்கிறார்கள் உண்மையிலேயே தலைவர் ஜெ குரு மீது பாசம் இருந்திருந்தால் பரங்கிப்பேட்டைக்கு வந்த அன்புமணி ராமதாஸ் காடுவெட்டிக்கு வந்து விட்டு போக வேண்டியது தானே பசும்பொன்னிற்கு சென்று மாலை போட நிற்பவர் காடுவெட்டிக்கு வந்து மாலை போட்டு விட்டு போக வேண்டியது தானே உண்மையிலேயே தெம்பு திராணி இருந்திருந்தால் விக்கிரவாண்டியில் 21 தியாகிகளுக்கு சிலை திறக்கும் போது அங்கு கோஷம் போட்டிருக்க வேண்டும் அன்றைக்கு குடும்பத்தோடு பயந்துகிட்டு திண்டிவனத்தை காலி பண்ணிட்டு தர்மபுரியில் போய் உட்கார்ந்து இருக்கிறார்கள் அப்பனும் மகனும். அன்புமணி தலைமை ஏற்ற பிறகு பாமகவில் இளைஞர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இவர்கள் தான் ஜெ.குருவின் சிலை திறப்பின் போது மாலை போட வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம் போட வைக்கிறார்கள் இது தவறானது. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இட ஒதுக்கீடு வழங்கினார்கள் கலைஞர் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இட ஒதுக்கீடு குறித்து கேட்டிருந்தால் கொடுக்கக்கூடிய இடத்தில் கலைஞர் இருந்தார். ஆனால் இவர் (ராமதாஸ்) அதைப் பற்றி எல்லாம் கேட்கவில்லை எனக்கு மூன்று இலாகாவில் உள்ள வருமானத்தை கொடு என வாங்கி கொண்டார். எந்த ஒரு தேர்தலிலும் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கவில்லை திமுகவுடன் கூட்டணி இருந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டார்கள் கூட்டணி மந்திரி சபை கொடுக்க திமுக தயாராக இருந்தது.ஆனால் எந்த ஒரு எம்எல்ஏவும் மந்திரியாகிவிடக்கூடாது தன் மகன் மட்டுமே மத்திய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்திலே ராமதாஸ் இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை இவர்களுஞைய இட ஒதுக்கீடு என்பது ஒரு பொய்யான பரப்புரை திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது மத்தியில் பல்வேறு பாமக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிகளாக இருந்துள்ளனர். ஆனால் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்யவில்லை நினைத்திருந்தால் வீடு கட்டி கொடுத்திருக்கலாம் படிப்பதற்கு உதவி பண்ணி இருக்கலாம் வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாம் பொருளாதார ரீதியாக எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம் எந்த ஒரு பாட்டாளி மக்கள் கட்சிக்காரனுக்கும் வன்னிய சமுதாயக் மக்களுக்கும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் - ஜெ.குரு இறந்த பிறகு வன்னியர் சங்கமே செயல்படவில்லை வன்னியர் சங்க தலைவராக ஜெ குரு இருந்தபோது ஊர் ஊராக சென்று வசூல் செய்து உருவாக்கிய கல்வி கோயில் தற்போது சரஸ்வதி கல்வி கோயிலாக உள்ளது. அங்கு ஒரு வன்னிய மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படவில்லை வன்னியர் சங்கம் ஜெ.குருவின் மகன் கனலரசன் தலைமையில் செயல்படும். பேரு தான் மஞ்சள் படையே த் தவிர மாவீரன் காடுவெட்டியாரின் வன்னியர் சங்கம் என கூறினார்
Next Story