சிந்தலவாடி- டூவீலர் மீது டிராவல்ஸ் பேருந்து மோதி விபத்து. கணவன், மனைவி, குழந்தை படுகாயம்.

சிந்தலவாடி- டூவீலர் மீது டிராவல்ஸ் பேருந்து மோதி விபத்து. கணவன், மனைவி, குழந்தை படுகாயம்.
சிந்தலவாடி- டூவீலர் மீது டிராவல்ஸ் பேருந்து மோதி விபத்து. கணவன், மனைவி, குழந்தை படுகாயம். கரூர் மாவட்டம், குளித்தலை, நடுவதியம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 45. இவரது மனைவி லட்சுமி வயது 38.இவர்களது மகன் சீசாந்த் வயது 4. இவர்கள் 3 பேரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவரது வாகனம் லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தலவாடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அதே சாலையில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து, சரவணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் சரவணன், அவரது மனைவி லட்சுமி, மகன் சீசாந்த் ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்ச சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனியார் பேருந்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.
Next Story