மத்திகிரி அருகே மினி லாரி மோதி இரண்டு பேர் உயிரிழப்பு.

X

மத்திகிரி அருகே மினி லாரி மோதி இரண்டு பேர் உயிரிழப்பு.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமார் (24). இவா் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி அன்று இவரும் இவருடைய தம்பி ரிங்கு (18) நண்பா் குஷ்பு (29)ஆகிய 3 பேரும் சோ்ந்து டூவீலரில் மத்திகிரி அருகே சென்றனர். அப்போது எதிரே வந்த மினிலாரி இவா்கள் மீது மோதியது. இதில் குஷ்பு சம்பவத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரிங்கு, சேருகுமார் ஆகிய 2 பேரும் ஒசூா் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரிங்கு உயிரிழந்தார். சேருகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story