ரத்த தானம் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

உதிரம் நண்பர்கள் குழுவினர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருமடல் பெண்மணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கி பிரிவில் இன்று பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ம.ப.தனராசு இரத்தம் கொடை வழங்கி உதவினார். இவரின் இந்த செயலுக்கு பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றம் கரங்கள் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் ஐயா வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர்கள் மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு எளம்பலூர் விக்னேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்
Next Story